என்ன விந்தை; ஆதியும் இல்லாமல் அந்தமும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்தை மனிதன் அவனுடைய நுன்னரிவைக் கொண்டு கட்டுப்படுத்த நினைக்கிறான், இயற்கையை வெல்ல பார்க்கிறான். இறுதியில் அவன் அறியாமை தோற்கிறது. விஞ்ஞானத்தால் அறியபாடாத பல உண்மைகள், தத்துவங்கள், ரகசியங்கள் அஞ்ஞானத்தால் அறியப்பட்டிருகின்றது, விளக்கப்பட்டிருகின்றது.
ஒவ்வொரு உயிர்களையும் ஏதோ ஒரு சக்தி இயக்கிக் கொண்டிருக்கின்றது. இதனை அறியாமல் செயல்படும் மனிதன் தன்னைக்கொண்டு, தான் அறிவைக்கொண்டு வாழ்கிறோம் என்ற அறியாமை எண்ணத்துடன் மமதை கொள்கிறான். இறுதியில் மரணத்தின் வாயிலில் அவன் பயணிக்கும் பொழுது அவனுடைய அறியாமை உணர்த்தப்படுகிறது.
ஒவ்வொரு உயிரின் பிறப்பும் இறப்பும் இந்த பிரபஞ்ச அறிவியலின் இரகசியத்தை உணர்த்துகிறது. ஒவ்வொரு பிறப்பு மற்றும் இறப்பின் பின்னாலும் ஒரு இரகசியம் ஒளிந்துகொண்டிருக்கிறது. பிறப்பு ஒரு கதையின் அத்தியாயத்தின் தொடக்கம், கர்ம வினையின் ஆரம்பம்; இறப்பு அந்த அத்தியாயத்தின், கர்ம வினையின் முடிவு, ஆனால் கதை முடிவதில்லை. ஒவ்வொரு உடலும் உயிரும் கருமம் செய்ய பணிக்கபடுகிறது. கருமம் தீரும் வரை கதை தொடரும்.
ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு வேறுபாடு இருக்கின்றது, அணைத்து உயிரினத்திற்கும் ஒரு ஒற்றுமை இருக்கின்றது. வேறுபாடு ஓது கொண்டுவந்த கர்ம வினைப்பயன், ஒற்றுமை இதனை ஆட்டுவிக்கும் ஒரு சக்தி.
எதற்காக இந்த கருமம் தொடங்குகிறது, பிறகு முடிகிறது..?
இன்னும் ஞானம் போதவில்லை..